கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 15, 2014

ஆழ்துளைக் கிணற்றை மூடுமா நகராட்சி நிர்வாகம்!

     இந்தியா முழுவதும் ஆழ்துளைக் கிணற்றை சரியாக மூடப்படாமல் அதிகமான விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இது தற்போது கடந்த ஆறுமாதத்தில் தமிழகத்தில்




இரண்டு சம்பங்கள் நடைபெற்று ஒரு குழந்தையின் உயிர் இழப்பும் ஏற்பட்டு உள்ளது.14-4-14 அன்று கூட சங்கரன்கோயில் அருகில் மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் மூன்று வயது சிறுவன் தவறி விழுந்து தீயணைப்பு துறையின் பெரும் முயற்ச்சியில் உயிருடன் மீட்கப்பட்டார். 

    தற்போது கடையநல்லுரில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு நகராட்சி சார்பில் அரசுக்கு சொந்தமான காயிதே மில்லத் திடலில்  பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக  போர்வெல்  போடப்பட்டது, ஆனால் இன்று வரை பைப்புகள் பொருத்தப்பட்டு பணிகள் நடைபெறாமல் வெறுமனே பிளாஸ்டிக் பையினால் கட்டப்பட்டு உள்ளது. தற்போது அந்த பையும் கிழிந்த நிலையில் உள்ளது. இதன் வழியாக 
தினம் தோறும் காலை, மாலையில் பள்ளி குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் கடந்து செல்கின்றனர். 

   மேலும் இந்த ஆழ்துளைக் கினற்றிக்கு அருகில் பள்ளி  குழந்தைகள் சென்று விளையாடுகின்றனர். இதனால் பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்னர், பைப்புகள் போடப்பட்டு முழுமையாக பூர்த்தி செய்யது வைக்க கடையநல்லூர் நகராட்சி & மாவட்டநிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறு கடையநல்லூர் தமிழ்நாடு  தவ்ஹீது ஜமாஅத் டவுண் கிளை  சார்பில் கேட்டுகொள்கிறது. 

No comments: